இன்னும் ஆறு மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களை ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன்பெற்று விட்ட நிலையில், அவர் வெற்றி பெற்றதாக ஊடகங்களே அறிவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது. கடந்த 28 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட ஜனாதிபதிகளில் மிக மோசமான தோல்வியை அடைந்துள்ள முதல் நபர் டொனால்டு டிரம்ப் ஆவார். எனினும்அவர் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்திருக்கிறார். வாக்குப் பதிவிலும், வாக்கு எண்ணிக்கையிலும் மோசடி நடந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
புதிதாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனும், கமலா ஹாரீசும், அமெரிக்க மக்களுக்குபுதியதோர் மாற்றத்தை அளிக்கப் போவதாகவும்,அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிற அரசை அமைக்கப் போவதாகவும் உறுதி அளித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட உறுதிகளைத்தான் டொனால்டுடிரம்ப் அளித்திருந்தார். அவருக்கு முன்பு பாரக்ஒபாமாவும் அளித்திருந்தார். ஆனால் இந்தியாவில் மோடி அளித்த தேர்தல் கால வெற்று வாய் ஜாலங்களை போன்றதே அமெரிக்க ஜனாதிபதிகளின் வாக்குறுதியும் என்பதே உண்மை. ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சி இப்போது தன்னைஅமெரிக்க மக்களின் மீட்பர் போல காட்டிக் கொண்டிருக்கிறது. இக்கட்சியின் சில தலைவர்கள் திடீரென்று சோசலிசத்தைப் பற்றி கூடபேசுகிறார்கள். டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைப்போலவே ஜனநாயகக் கட்சியும் ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சிதான்; பல நாடுகளில் கொடிய யுத்தங்களை கட்டவிழ்த்துவிட்ட கட்சிதான்.
அமெரிக்க ஜனநாயகத்தில் பிரதானமான இந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைதேர்ந்தெடுக்க வேண்டிய அவல நிலையில்தான் அந்த மக்கள் இருக்கிறார்கள். டொனால்டுடிரம்ப் வெற்றி பெற்ற போது பெரும் கூச்சல் போட்டு கொண்டாடி மகிழ்ந்த அமெரிக்க பெரும்கார்ப்பரேட் ஊடகங்களும் பெரும் கார்ப்பரேட் ஆயுதக் கம்பெனிகளும்தான் ஜோ பைடனின் வெற்றியையும் கொண்டாடுகின்றன.
கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக இந்தஉலகையும், அமெரிக்காவையும் உலுக்கியகொரோனா பெருந்தொற்றை விஞ்ஞானப்பூர்வமாகவும், மருத்துவரீதியாகவும் அணுகாமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு அமெரிக்க மக்களை மரணத்தின் விளிம்பில் தள்ளியதே டிரம்ப் தோல்வியின் அடிப்படை காரணங்களில் ஒன்றாகும். இந்த வாய்ப்பை பைடன் மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். நியூயார்க் உள்பட, கொரோனா மரணங்கள் எங்கு அதிகம்நிகழ்ந்தனவோ அந்த மாகாணங்களில் எல்லாம்டிரம்ப் பலத்த அடி வாங்கியிருக்கிறார். கருப்பின மக்கள் குவியலாக டிரம்ப்புக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள். கடந்த முறை வெள்ளை இனதொழிலாளர்களை சூழ்ச்சி செய்து பிரித்தாளும் சதிக்கு இரையாக்கி வெற்றி பெற்ற டிரம்ப்பின் சவாடல்கள் இப்போது எடுபடவில்லை. அதனால்தான் பைடன், அனைவருக்குமான ஆட்சி என்று சற்று அடக்கி வாசிக்கிறார். ஆனால் உண்மையில் அப்படி இருக்கப் போவதில்லை.